முலாயம் சிங்கால் மிரட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி திடீர் சஸ்பெண்ட்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவால் மிரட்டப்பட்டதாகக் கூறப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அமிதாப் தாகூர் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சிவில் பாதுகாப்பு பொது ஆய்வாளராக இருப்பவர் அமிதாப் தாகூர். இவர் முலாயம்சிங் யாதவ் தம்மை மிரட்டியதாக கடந்த சனிக்கிழமை போலீசில் புகாரளித்தார்.

இதற்கு ஆதாரமாக 2 நிமிடங்கள் 10 நொடிகள் கொண்ட தொலைபேசி உரையாடல் பதிவையும் அமிதாப் தாகூர் வெளியிட்டார். அதேநேரத்தில் முலாயம்சிங் யாதவ் மிரட்டியது சரியானதே என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நியாயப்படுத்தியும் இருந்தார்.
இந்த களேபரம் அடங்குவதற்குள் அமிதாப் தாகூர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தது புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அமிதாப் தாகூரோ, என் மீதான பாலியல் பலாத்கார புகாருக்கு, எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது. முலாயம் சிங்குக்கு எதிராக நான் புகார் அளித்தேன். அதற்குப் பரிசாகத்தான், என் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்னிடம் வேலைக்கு வந்த பெண்ணை நான் பலாத்காரம் செய்து விட்டதாக, புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவரம், எனக்கு கடிதம் மூலமாக தெரிய வந்தது என்றார்.
மேலும் தாம் மிரட்டப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் முலாயம் சிங் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமிதாப் தாகூர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் திடீரென அவரை நேற்று சஸ்பென்ட் செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது புதிய பஞ்சாயத்துக்கு வழிவகுத்துள்ளது.
அதிகாரி மறுப்பு
இதனிடையே தாம் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை.. தம் மீதான அரசின் புகார்கள் ஆதாரமற்றவை என்று சஸ்பென்ட் ஆன அதிகாரி அமிதாப் தாகூர் மறுத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications