உத்தர பிரதேசத்தில் அனல்மின் நிலையத்தில் விபத்து... பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
உ.பி.,யில் அனல்மின்நிலையத்தில் பாய்லர் வெடித்த சம்பவம்... பலி எண்ணிக்கை உயர்ந்தது.....
ரேபரேலி : உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி உன்சஹாரில் என்.டி.பி.சி.,க்கு சொந்தமான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் நேற்று 6-வது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 26 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்கட்ட விசாரணையில், பாய்லரின் அடிப்பகுதியில் சாம்பல் அளவுக்கு அதிகமாக சேர்ந்ததால், அழுத்தம் ஏற்பட்டு வெடித்து உள்ளது என்று தேசிய அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கிறார்கள்.
விபத்து சமயத்தில் அதிகமான பணியாளர்கள் அங்கு இருந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் பலியானவர்களுக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்தகட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1550 மெகா வாட் திறன் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தால் ஒன்பது மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த விபத்து மூலம் மின்சார உற்பத்தியில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து நரேந்திர மோடி ட்விட்டரில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். மேலும், இன்று காலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ராகுல் காந்தி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications