சப்பாத்தி தீஞ்சு போனதால் முத்தலாக் கூறிய கணவன்... மனைவியை வீட்டிலிருந்து அடித்து துரத்திய கொடுமை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சப்பாத்தி தீய்ந்து போனதால் கணவர் தனது மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.
முத்தலாக் எனப்படுவது முஸ்லிம் சமூகத்தினர் மனைவியை விவாகரத்து செய்வதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இதை ஆண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
இந்த நடைமுறையை ரத்து செய்ய முஸ்லிம் பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது மத்திய அரசும் முத்தலாக் சட்டத்தை ரத்து செய்வதாக கூறியது. இந்நிலையில் இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்டத்தை பின்பற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
எனினும் இந்த மசோதாவை மக்களவையில் பாஜக அரசு நிறைவேற்றியது. எனினும் ராஜ்யசபாவில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் வாட்ஸ் ஆப், போன், ஸ்கைப், எஸ்எம்எஸ் மூலம் முத்தலாக் சட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் மெஹபூபா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி செய்த சப்பாத்தி தீய்ந்து போனதற்காக அவருக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டு விரட்டிவிட்டதாக அந்த பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
வீட்டை விட்டு விரட்டுவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் மனைவிக்கு சிகரெட்டால் சூடும் வைத்ததாக அந்த பெண் புகார் அளித்தார்.