உ.பி.யில் பாஜக வென்றாலும் மெஜாரிட்டி நஹியாம்... இப்படியும் எக்ஸிட் போல் முடிவுகள்!
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வென்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்கின்றன சில எக்ஸிட் போல் முடிவுகள்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக வென்றாலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காது என நியூஸ் எக்ஸ்- எம்.ஆர்.சி. மற்றும் ஏபிபி எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவை.

தற்போது வாக்குப் பதிவுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.
ஆனால் நியூஸ் எக்ஸ்- எம்.ஆர்.சி கருத்து கணிப்பில் பாஜக அதிகபட்சம் 185 இடங்களைத்தான் பெற முடியும்; ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைக்காது என கூறியுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் கூட்டணிக்கு 120 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 90 இடங்களும் கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவு.
ஏபிபி எக்ஸிட் போல்
ஏபிபி எக்ஸிட் போல் முடிவுகளின் படி சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணிக்கு 156 முதல் 169 இடங்களும் பாஜகவுக்கு 167 முதல் 176 இடங்களும் கிடைக்குமாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 60 முதல் 72 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications