உத்தரகண்ட்டில் அடுத்தடுத்து மேக வெடிப்பு.. நள்ளிரவில் பல வீடுகள் தரைமட்டம்.. என்ன நடந்தது?
டேராடூன்: வட இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாகக் கொட்டிய கனமழையில் பலர் மாயமாகியுள்ளனர். அங்குக் கனமழை தொடர்வதால் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்தக் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுப் பாதிப்புகளும் மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே பல வடமாநிலங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. அப்படிதான் இப்போது உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டியுள்ளது.

கொட்டிய கனமழை
குறுகிய நேரத்தில் அங்குப் பெய்த இந்தக் கனமழையால் 10 பேர் மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கனமழை மற்றும் வெள்ளத்தால் அங்கிருந்த ஆறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. உத்தரகண்ட் பகுதியில் அமைந்துள்ள நந்தா நகரில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இடிபாடுகளில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எச்சரிக்கை
பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருத்துவக் குழுவும், மூன்று ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன. இருப்பினும், வானிலை அங்குத் தொடர்ந்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழையும் இப்போதைக்கு முடிவது போலத் தெரியவில்லை. சாமோலியில் வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீட்புப் பணிகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மேக வெடிப்பு காரணமாகப் பலரும் தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு, டேராடூன் மாநிலத் தலைநகரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். சாலைகள், வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு முக்கிய பாலங்கள் இடிந்து விழுந்ததால், நகரில் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தொடரும் கனமழை
செப்டம்பர் 20 வரை டேராடூன், சம்பாவத் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக தீவிர கனமழை, உயிர்ச்சேதம், நிலச்சரிவுகள் மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்தும் எச்சரித்துள்ளது.
அங்குக் கடந்த சில நாட்களாகவே கனமழை தொடர்ந்து வருவதால் மாநிலம் முழுவதும் இதுவரை 15 பேர் மாயமாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அத்தியாவசியச் சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். அந்தளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
புஷ்கர் சிங் தாமி
முதல்வர் புஷ்கர் சிங் தாமி மேலும் கூறுகையில், "சேதமடைந்த உள்கட்டமைப்பைச் சீர்செய்து, போக்குவரத்தைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், வீடுகளுக்கு மின்சார இணைப்பைக் கொடுக்கவும் முயன்று வருகிறோம்" என்றார். இதுவரை சுமார் 85% வீடுகளுக்கு ஏற்கனவே மின்சாரம் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள பகுதிகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரகண்ட் மட்டுமல்லாமல், இமாச்சலப் பிரதேசத்திலும் இந்த வாரம் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மழை தொடர்பான இந்த விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications