இந்தியர்களை மீட்க வி.கே.சிங் தலைமையில் மீட்புக் குழு.. தெற்கு சூடான் விரைந்தது - சுஷ்மா சுவராஜ்
டெல்லி: இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் தலைமையில் மீட்புக் குழு தெற்கு சூடான் நாட்டிற்கு சென்றிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.

இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரால் சுமார் 600 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று உயரதிகாரிகளுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், போர் நடைபெறும் தெற்கு சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க "சங்கத் மோச்சான்" என்று பெயரிடப்பட்டுள்ள திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங் தலைமையில், மீட்புக் குழு அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தெற்கு சூடானில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு கொண்டு வருவதற்காக, C-17 ரக சிறப்பு விமானங்கள் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்நிலையில் சூபா நகருக்கு அந்த விமானம் சென்றடைந்தது. சூடானில் தவித்து வரும் குழந்தைகள், பெண்கள், ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் 5 கிலோ வரை பொருட்கள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதே எங்களின் இலக்கு என மத்திய வெளியுறத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். மேலும் அங்குள்ள இந்தியர்கள் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications