ராஜபக்சேவை அழைப்பதை கைவிடுக : மோடி, ராஜ்நாத்சிங்கிடம் வைகோ நேரில் வலியுறுத்தல்!!
டெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைக்கக் கூடாது என்று பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் வலியுறுத்தினார்.
வரும் 26-ந் தேதி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ கண்ணீர் சிந்தி உருக்கமான கடிதமும் அனுப்பிப் பார்த்தார். ஆனால் பாஜக தலைவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று டெல்லி சென்ற வைகோ முதலில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ராஜபக்சேவை அழைப்பதை தவிர்க்குமாறு வைகோ வலியுறுத்தினார்.
தொடக்கமே தவறாகப் போய்விடக் கூடாது..
பின்னர் டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ. மோடியின் தலைமையில் நல்லதொரு நிர்வாகம் நடைபெறும் என்று நம்புகிறேன். ஆனால் அவரது பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. பா.ஜ.க. ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இதுபோன்று நடக்கக்கூடாது.
தொடக்கமே தவறாக போய் விடக்கூடாது. பாரதிய ஜனதாவின் நன்மைக்காக சொல்கிறேன் என்றார்.
அப்போது ராஜபக்சே பதவியேற்பு நிகழ்ச்சி வருவது உறுதியானால் அந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த வைகோ, மோடி என்ன முடிவு எடுப்பார் என எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறினார்.
மோடியுடன் சந்திப்பு
இனதைத் தொடர்ந்து நரேந்திர மோடியை வைகோ நேரில் சந்தித்தார். அப்போது ராஜபக்சேவை பதவியேற்கும் விழாவுக்கு அழைப்பதை கைவிட வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
மேலும் ராஜபக்சேவை அழைப்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானது அல்ல; தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றும் இந்த சந்திப்பின் போது வைகோ சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஈழத் தமிழர் பிரச்சனையை நாட்டின் தேசிய பிரச்சனை என்றவர் பாஜகவின் அருண் ஜேட்லி. அப்படியானால் ராஜபக்சேவை அழைப்பதை கைவிட்டு ஈழத் தமிழர் பிரச்சனை தேசிய பிரச்சனைதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications