காவிரி.. ஒசூர் எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம்.. பீதியில் கர்நாடக தமிழர்கள்
Recommended Video

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் கன்னட அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. தமிழகத்தில் முழு கடையடைப்பு நடத்தினால் தமிழக எல்லையை முற்றுகையிடுவோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் எச்சரித்திருந்தனர்.

அதன்படி பெங்களூர்-ஒசூர் எல்லையான அத்திபள்ளி பகுதியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் இன்று மதியம் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழக எல்லையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். எனவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தின. இதற்கு பதிலடியாக வரும் 12ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
கன்னட அமைப்பினரின் இதுபோன்ற நடவடிக்கையால் கர்நாடகவாழ் தமிழர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications