இந்தியா மீது தாக்குதலுக்கு முயற்சித்தால்... மறக்க முடியாத பதிலடி.. பாக்.கை எச்சரித்த வெங்கையா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான போர் நடக்கும்.. பாக். அமைச்சர் பகீர் பேட்டி

    விசாகப்பட்டினம்: இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு மறக்க முடியாத பதிலடி கிடைக்கும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

    ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில் இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாட்டினர்தான் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தினர். நாம் யாரையும் தாக்கவில்லை.

    Venkaiah Naidu says that if any country tries to attack India, we will give a befitting reply

    ஆனால் யாரேனும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் நமது பதிலடி இருக்கும். நமது அண்டை நாடு ஒன்று தொடர்ந்து தீவிரவாதத்திற்கு உதவி செய்கிறது. நிதி வழங்குகிறது மற்றும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

    மனித குலத்திற்கு சேதம் விளைவிக்கிறோம் என்பது பற்றியும் வருங்காலத்தில் இந்த சேதம் அவர்களுக்கே திரும்பும் என்பதை உணராமல் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட நாம் விரும்பவில்லை. ஆனால் காஷ்மீர் விவகாரம் குறித்து நமது உள்நாட்டு விவகாரத்திலும் வேறு யாரும் தலையிட கூடாது என நம்புகிறோம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார் வெங்கையா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+