விஐபி பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திருப்பதி வாருங்கள்- வெங்கையா நாயுடு
திருப்பதி: முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திருப்பதிக்கு வந்தால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் அவர்கள் தரிசிக்க முடியும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வருகை தந்தார். அப்போது, அவருக்கு ஏழுமலையான் கோவிலின் வாசலில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேத பண்டிதர்கள்
தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற வெங்கையா நாயுடு ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் கோவிலில் உள்ள ரங்கநாயர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.

அதிகரித்து வருகிறது
தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசு ஆகியவற்றை வழங்கினர். பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த வெங்கையா நாயுடு, திருப்பதி மலைக்கு சென்று சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் பக்தர்களிடையே வெகுவாக அதிகரித்து வருகிறது.

வகுத்து கொள்ள வேண்டும்
எனவே, மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் வருடத்தில் ஒரு முறை மட்டுமே திருப்பதி மலைக்கு வரும் வகையில் தங்கள் பயண திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சாமி கும்பிடுவது
தான் குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மற்றவர்களுக்கும் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக வருடத்தில் ஒரு முறை மட்டுமே திருப்பதி மலைக்கு வருவதும், வரிசையில் சென்று சாமி கும்பிடுவதும் தன்னுடைய வழக்கம் என்று அவர் தெரிவித்தார்.

தாமதம்
இதேபோல் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். இது போல் விஐபிக்கள் அடிக்கடி திருப்பதிக்கு வருவதால் சாதாரண மக்கள் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தேவையற்ற பதற்றங்களுக்கும் இது வழிவகுக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications