வாகனங்கள் மீது கல்வீச்சு, திறந்த கடைகள் மீது வெடிகுண்டு வீச்சு...நேற்று நடந்த கேரள பந்த்தில் பதற்றம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று நடந்த பந்தில் திறாந்திருந்த கடைகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக ஏராளனமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கதிரூர் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான மனோஜும், மற்றொரு ஆர்எஸ்எஸ் நிர்வாகியான பிரமோத் என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் வெட்டப் பட்டனர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனோஜ் கொலையை கண்டித்து நேற்று கேரளாவில் பந்த் நடத்தப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
முழு அடைப்பை ஓட்டி கேரளாவில் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கல்வீச்சு...
வயநாடு, கொச்சி, கொல்லம் உள்பட 4 இடங்களில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது. இதனால் கேரளா தமிழ்நாடு இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வெடிகுண்டு வீச்சு...
இந்நிலையில் கண்ணூர் ஆடூர் பாலம், மூணுபெரியா மற்றும் பெரனாசேரி ஆகிய பகுதிகளில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 கடைகள் மீது வெடிகுண்டுகள் வீசிச் சென்றனர்.

பதற்றம்...
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனபோதும், இந்த வெடிகுண்டு தாக்குதல் சமபவத்தால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது.

கூடுதல் பாதுகாப்பு...
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மனோஜ் கொலை சம்பவத்தை விசாரிக்க குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆனந்தகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications