ஜம்மு காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக நான் கூறவே இல்லை: வி.கே. சிங் பல்டி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக தான் கூறவே இல்லை என்று முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக முன்னாள் ராணுவ தளபதி ஏ.கே. சிங் தெரிவித்தார். ராணுவ நிதி மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டது என்ற சிங்கின் கருத்து பெரும் சர்ச்சை கிளப்பியது.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக நான் கூறவில்லை. உறவுகளை நிலைப்படுத்த சில திட்டங்களை ராணுவம் எடுத்துச் செய்தது என்று தான் கூறினேன் என்றார்.












Click it and Unblock the Notifications