மேற்கு வங்க சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!
கொல்கத்தா: கேரளா, பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து மேற்கு வங்க சட்டசபையிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முதன் முதலாக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபைகளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கேரளாவை பின்பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில் சி..ஏ.ஏ. விவகாரத்தில் மவுனம் காத்து வந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக, தங்களது மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றுவோம் என அறிவித்தார். மேலும் சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் விரைவில் ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அத்துடன் மத்திய அரசின் இந்த குடியுரிமை சட்ட திருத்தமானது 100% கடுமையான எதிர்ப்புக்குரியது. இதனை தனிப்பட்ட முறையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவித்தும் இருக்கிறேன் என கூறியிருந்தார் சந்திரசேகர ராவ்.
இதனிடையே மேற்கு வங்க சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் 4-வது மாநிலம் மேற்கு வங்கம்.
சி.ஏ.ஏ.வை எதிர்த்து பல்வேறு கட்ட பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. தற்போது மேற்கு வங்க சட்டசபையிலும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது மமதா அரசு.
மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இம்மசோதாவை இன்று பிற்பகல் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
கேரளாவை போல சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மேற்கு வங்க மாநில அரசு வழக்கு தொடரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications