ஈராக் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட நர்சுகள் 46 பேரும் விடுதலை - நாளை கொச்சி வருகை
திருவனந்தபுரம்: ஈராக்கில் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய

விமானம் மூலமாக, நாளை காலை 7 மணிக்கு அனைவரும் கொச்சி வர உள்ளனர்.
ஈராக்கின் திக்ரிட் நகரில் உள்ள மருத்துவமனையொன்றில் பணியாற்றி வந்த தமிழகம், கேரளாவை சேர்ந்த 46 நர்சுகள் கடந்த மாதம் 11ம்தேதி முதல், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டனர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த நர்ஸ் மோனிஷா மட்டும் தமிழகத்தை சேர்ந்தவர். பிற நர்சுகள் கேரளத்தை சேர்ந்தவர்கள். தீவிரவாதிகளிடமிருந்து தங்கள் மகள்களை காப்பாற்றித்தர நர்சுகளின் பெற்றோர் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைவிடுத்துவந்தனர்.
இந்நிலையில் 46 நர்சுகளும் நேற்றிவு மொசூல் நகருக்கு தீவிரவாதிகளால் இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் நர்சுகள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக, நர்சுகள் அனைவரையும் தீவிரவாதிகள் இன்று விடுதலை செய்தனர். அவர்கள் ஈராக் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ராணுவ வாகனம் மூலமாக, 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எர்பில் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்து அனைவரையும் இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. ஏர் இந்தியா விமானம் மூலமாக, நாளை காலை 7
மணிக்கு அவர்கள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துவரப்படுகிறார்கள். இந்த தகவலை டெல்லியில் முகாமிட்டு நர்சுகளை திரும்ப அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் உறுதி செய்தார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications