ஈராக் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட நர்சுகள் 46 பேரும் விடுதலை - நாளை கொச்சி வருகை
திருவனந்தபுரம்: ஈராக்கில் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய

விமானம் மூலமாக, நாளை காலை 7 மணிக்கு அனைவரும் கொச்சி வர உள்ளனர்.
ஈராக்கின் திக்ரிட் நகரில் உள்ள மருத்துவமனையொன்றில் பணியாற்றி வந்த தமிழகம், கேரளாவை சேர்ந்த 46 நர்சுகள் கடந்த மாதம் 11ம்தேதி முதல், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டனர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த நர்ஸ் மோனிஷா மட்டும் தமிழகத்தை சேர்ந்தவர். பிற நர்சுகள் கேரளத்தை சேர்ந்தவர்கள். தீவிரவாதிகளிடமிருந்து தங்கள் மகள்களை காப்பாற்றித்தர நர்சுகளின் பெற்றோர் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைவிடுத்துவந்தனர்.
இந்நிலையில் 46 நர்சுகளும் நேற்றிவு மொசூல் நகருக்கு தீவிரவாதிகளால் இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் நர்சுகள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக, நர்சுகள் அனைவரையும் தீவிரவாதிகள் இன்று விடுதலை செய்தனர். அவர்கள் ஈராக் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ராணுவ வாகனம் மூலமாக, 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எர்பில் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்து அனைவரையும் இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. ஏர் இந்தியா விமானம் மூலமாக, நாளை காலை 7
மணிக்கு அவர்கள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துவரப்படுகிறார்கள். இந்த தகவலை டெல்லியில் முகாமிட்டு நர்சுகளை திரும்ப அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் உறுதி செய்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications