வருங்கால மருமகளைச் சந்தித்தார் கோஹ்லியின் தாயார்...!
மும்பை: மும்பைக்கு வந்து தனது வருங்கால மருமகள் அனுஷ்கா சர்மாவைச் சந்தித்துப் பேசியுள்ளார் விராத் கோஹ்லியின் தாயார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின்போது கோஹ்லியின் அண்ணனும் உடன் இருந்தாராம்.
திருமணத்தை எப்போது வைத்துக் கொள்வது என்பது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக சொல்கிறார்கள்.

நெடு நாள் காதல்
அனுஷ்காவும், கோஹ்லியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இந்தக் காதல் காரணமாக அனுஷ்கா தனது வேலையிலிருந்து கவனச் சிதறல் இல்லாமல் இருந்தாலும் கூட கோஹ்லி கடுமையாக தடுமாறுகிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

சீக்கிரமே திருமணம்
இதனால் இருவருக்கும் திருமணத்தை சீக்கிரமே முடித்து விடுவது என்ற முடிவுக்கு இரு வீட்டாரும் வந்துள்ளதாக தெரிகிறது.

கோஹ்லி சந்தித்தார்
ஏற்கனவே கடந்த ஆண்டு அனுஷ்காவின் பெற்றோரை கோஹ்லி சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில் அனுஷ்காவை, கோஹ்லி குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

மாமியார்
சிலநாட்களுக்கு முன்பு அனுஷ்காவை கோஹ்லியின் தாயாரும், அண்ணனும் பார்த்துப் பேசியதாக சொல்கிறார்கள்.

நல்லது நடந்தா சரிதான்
எப்படியோ நல்லது நடந்து, கோஹ்லி டென்ஷன் இல்லாமல் தனது வேலையில் கவனம் செலுத்தினால் போதும்....!












Click it and Unblock the Notifications