நிலக்கரி, கனிம சுரங்கங்களை தனியாருக்கு கொடையாக கொடுப்பதா? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி

பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை அமைச்சரக பொறுப்பையும் வகித்த காலத்தில், நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையில்,"நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளை பின்பற்றாதது ஏன்' என, மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான," பெஞ்ச்' முன், புதனன்றும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், வாகனவதியிடம், நீதிபதிகள், சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். நிலக்கரி இந்தியா லிட்.,டுக்கென ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கு எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டன? இது தொடர்பாக, அரசு, விரிவான விளக்கம் அளிக்காத வரை, விசாரணையை தொடர முடியாது.
சுரங்க ஒதுக்கீட்டுக்காக, தனியார் நிறுவனங்களிடமிருந்து, எந்த அடிப்படையில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்பதையும், அரசு விளக்க வேண்டும். நிலக்கரி சுரங்கங்கள், இயற்கை வளங்கள். அவற்றை, தனியார் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, தன் விருப்பம் போல், வழங்க முடியாது. நிலக்கரி சுரங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கு கொடையாக கொடுக்கப்படும் பொருட்கள் அல்ல. இதுகுறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, ""இது தொடர்பாக பதில் அளிக்க, இம்மாதம், 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்க வேண்டும்,'' என, அட்டர்னி ஜெனரல் கோரிக்கை விடுத்ததை அடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
காணாமல் போன ஆவணங்கள்
இதற்கிடையே, நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான, சில முக்கிய ஆவணங்கள் காணமல் போனதாக, மத்திய அரசு தரப்பில், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் காணாமல்போன ஆவணங்கள் குறித்த விரிவான பட்டியலை சிபிஐ-யிடம் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
சிபிஐ-க்கும் அமைச்சகத்துக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ரகசியம் காக்கப்பட வேண்டியது என்பதால் அதுதொடர்பாக விரிவாக பேச முடியாது என நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சுரங்க ஒதுக்கீடு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து வருவதாக நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications