மமதா மாநிலத்தில் பயங்கரம்: ஏ.டி.எம். மையத்தில் மனநலம் குன்றிய பெண் பலாத்காரம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள நாசிர்கஞ்ச் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்வதறியாது நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சம்பவ நடந்த இடம் வழியாக கல்யாண கோஷ்டி சென்றுள்ளது. அதில் இருவர் ஏ.டி.எம். மையத்திற்கு ஏதோ விபரீதம் நடப்பதை பார்த்து வந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சீரழித்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த கொடூரம் நடந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications