நிருபர் கார்த்திகை செல்வன் எதற்காக கொலை செய்யப்பட்டார்?: பரபரப்பு தகவல்கள்
சாத்தூர்: பத்திரிகை நிருபர் கார்த்திகை செல்வன் கொலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளன.
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நவீன நெற்றிக்கண் வார இதழின் நிருபராக பணியாற்றி வந்தவர் கார்த்திகை செல்வன்(40). அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று மாலை சாத்தூர்-கோவில்பட்டி சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கார்த்திகை செல்வன் குறித்து விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது,
நீண்ட காலமாக பூட்டிக் கிடந்த தமிழ்நாடு ஹோட்டலை கார்த்திகை செல்வன் 3 அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து நடந்தி வந்துள்ளார். ஹோட்டல் திறப்பு விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. திறப்பு விழாவுக்கு சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் வந்துள்ளார்.
கார்த்திகை செல்வன் மதுரை-திருமங்கலத்திற்கு அருகில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நிலங்கள் வாங்கியுள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அதில் அவருக்கு பகையும் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட முக்கிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார். நேற்று மணல் கடத்தல் குறித்து புகைப்படம் எடுத்துவிட்டு வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தற்காப்புக்காக எப்பொழுதும் ஆயுதத்துடன் சுற்றுவாராம்.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications