பாவனாவை திலீப் 'பழி வாங்க' காரணம் என்ன? பின்னணியில் பரபரப்பு தகவல்கள்
கொச்சி: நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழி மறித்து கடத்தப்பட்டார். காரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு பாவனா உள்ளானார்.
இருப்பினும் இதுகுறித்து பாவனா துணிச்சலாக போலீசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை இந்த வழக்கை சவாலாக எடுத்து விசாரித்தது. இதையடுத்து, அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி கைது செய்யப்பட்டு அவர் கொடுத்த தகவலின்பேரில் பல்சர் சுனில் உட்பட கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திலீப் கைது
இந்நிலையில், வழக்குதொடர்பாக நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.

போலீஸ் தரப்பு தகவல்
திலீப்புக்கு பாவனா மீது ஏன் இந்த வன்மம் என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திலீப், அவருடைய முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஆனால், திருமணமான காவ்யா மாதவன் மீது திலீப்புக்கு மோகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தனர். இதை அறிந்த பாவனா, தனது தோழி மஞ்சு வாரியரிடம் அதுகுறித்து தெரிவித்தார்.

மஞ்சு வாரியாருடன் சண்டை
மஞ்சு வாரியரும், திலீப்பிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு மூண்டது. சண்டை அதிகமானதால், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2வது திருமணம் செய்து கொண்டார். மேலும், கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங் களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப், பாவனாவிடம் வற்புறுத்தினார். அவரோ அதற்ககு மறுத்து விட்டதாக தெரிகிறது.
Recommended Video


பழிக்கு பழி
இதற்கிடையேதான், பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. தனது திருமண வாழ்க்கையை பந்தாடியது பாவனா என்று, கோபமடைந்த திலீப், பாவனாவின் திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் தொல்லை செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டதாம். இதற்கான ஆதகாரங்கள் கிடைத்துள்ளதால்தான் திலீப் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications