குடியரசு தலைவர் வேட்பாளராக மீராகுமார் தேர்வு.. பாஜகவிடம் அப்பட்டமாக சரண்டர் ஆன எதிர்க்கட்சிகள்
டெல்லி: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், பாஜகவின் அரசியல் அஜென்டாவுக்கு ஆடும் பொம்மைகளாக எதிர்க்கட்சிகள் காட்சியளிக்கின்றன.
பிரதமர் மோடியின் வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமையை நாடிய எதிர்க்கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணம் வலுவான ஒரு பார்வையும், தலைமையும் இல்லாததுதான்.
தங்கள் பலகீனத்தை இப்போது எதிர்க்கட்சிகள், குடியரசு தலைவர் வேட்பாளர் பட்டியலிலும் காட்டிவிட்டன.

பாஜகவுக்கு நல்லது
பாஜக தன் மீதானஉயர்ஜாதி ஆதரவு முத்திரையில் இருந்து வெளிவருவதற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அந்த கட்சியை பொறுத்தளவில் அது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. ஆனால் காங்கிரசுக்கு என்னவாயிற்று?

காங்கிரஸ் பலகீனம்
காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற, ஜாதி சார்பற்ற கட்சி என பெயரளவுக்காவது பெயரெடுத்த கட்சி. அப்படியிருக்கும்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மீரா குமாரை அது ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏதும் இல்லை. அவர்களாக விருப்பப்பட்டு வேட்பாளரை தேர்ந்தெடுத்திருந்தால் அது வேறு. ஆனால் பாஜக தலித் வேட்பாளரை தேர்ந்தெடுத்ததால் போட்டிக்கு செய்ய வேண்டிய கட்டாயத்தால் செய்ததால் காங்கிரசின் பலகீனம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

பொம்மலாட்டம்
பாஜக வெகு அழகாக காய் நகர்த்தி பிராமணர்-பனியா போன்ற உயர்ஜாதியினர் வாக்கு வங்கியை தாண்டி, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களின் வாக்குகளையும் கவர ஆரம்பித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் பதில் தாக்குதலை நடத்தாமல், பாஜக போடும் அஜென்டாவின்படி அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறது.

பாஜகவுக்கு பதிலடி
மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இப்படி கூறுகிறார், "ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பனியாவையோ, பிராமண சமூகத்தை சேர்ந்தவரையோ வேட்பாளராக நிறுத்தியிருந்தால் அது பாஜகவின் வாக்கு வங்கியை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கும்" என்கிறார். பாஜக நம்மை கைவிட்டுவிட்டது என்ற தோற்றத்தை முன்னேறிய ஜாதியினர் மத்தியில் ஏற்படுத்த அது உதவியிருக்கும். இது பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

வடகிழக்கு மாநிலம்
காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கலாம். ஏனெனில் அங்கு பாஜக இப்போது வேகமாக முன்னேறிக்கொண்டுள்ளது. அதற்கு செக் வைப்பதாக அந்த தேர்வு அமைந்திருக்கலாம்.

முஸ்லிம் வேட்பாளர்
காங்கிரஸ் கட்சி ஜம்முகாஷ்மீரை சேர்ந்த பரூக் அப்துல்லா போன்ற ஒரு முஸ்லிமை வேட்பாளராக அறிவித்திருக்கலாம். பாஜக கூட்டணி அரசு காஷ்மீர் பிரிவினைவாத விவகாரங்களை கையாளுவதில் தோல்வியடைந்துவருவதை புடம்போட்டு காட்டுவதை போல அந்த மூவ் அமைந்திருக்கும். ஆனால் இப்படி வித்தியாசமாக எதையுமே யோசிக்காத எதிர்க்கட்சிகள், பாஜக காட்டிய பாதையில் நடக்கின்றன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications