நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தை காங்கிரஸ் அரசுகள் வேவுபார்த்தது ஏன்?
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945ஆம் ஆண்டுக்குப் பின்னர் உயிரோடு இருந்தாரா இல்லையா என்ற விவாதத்தைப் போலவே காங்கிரஸ் அரசு ஏன் நேதாஜி குடும்பத்தை வேவுபார்த்தது என்பதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மேற்கு வங்க அரசு அண்மையில் பகிரங்கப்படுத்தியது. அதில் 1964ஆம் ஆண்டு வரை நேதாஜி உயிருடன் இருந்திருக்கலாம் என்பதை சில ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

பெரும்பாலான ஆவனங்களில் நேதாஜி குடும்பம் வேவு பார்க்கப்பட்டதையும் தெரிவிக்கிறது. குறிப்பாக நேதாஜியின் சகோதரர் சரத் போஸ்தான் வேவு பார்க்கப்பட்டிருக்கிறார்.. இதற்குக் காரணம் அவர்தான் நேதாஜியின் மூளையாக இருந்தார் என கருதப்பட்டது.... மேற்கு வங்கத்தில் மட்டுமே அவர் தொடர்பாக 1,824 கோப்புகள் இருக்கின்றன எனில் பார்த்துக் கொள்ளலாம்..
சரத் சந்திரபோஸ், காங்கிரஸுக்கு எதிரான இயக்கத்தை நாடு தழுவிய நடத்த முயற்சித்தவர். நேருவின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை நடத்த முயற்சித்தவர் என்றே கருதப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நேதாஜி நாட்டைவிட்டு வெளியேறிய போது இந்தியாவின் சரத்போஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மிகத் தீவிரமாக இயங்கினர். தெற்கு கொல்கத்தா இடைத்தேர்தல் ஒன்றில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அபார பெருவெற்றியையும் பெற்றிருந்தார் சரத்போஸ்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அரசுக்கு எதிரானவராக சரத்போஸ் முத்திரை குத்தப்பட்டிருந்தார். அவர் மும்பைக்கு சென்றபோதும்கூட தொடர்ந்து வேவுபார்க்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த முயன்ற சரத் போஸின் முயற்சி அவரது மரணத்தால் நிறைவேறாமல் போனது...
-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications