அடுத்த வருடம் குஜராத் சட்டசபை தேர்தல்: சோம்நாதர் கோயில் தரிசனத்துடன் பிரசாரத்தை தொடங்கிய கேஜ்ரிவால்
ராஜ்கோட்: குஜராத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அங்குள்ள கோயிலில் வழிபாடு செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி தற்போதே களத்தில் குதித்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்துக்கு, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கேஜ்ரிவால் இன்று ஒருநாள் பயணம் மேற்கொண்டார்.

குஜராத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இந்த பயணத்தை கேஜ்ரிவால் மேற்கொண்டதாக தெரிகிறது.
முதலில் தனது குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ராஜ்கோட் சென்ற அவர், பின்னர் பிரசித்தி பெற்ற சோம்நாத் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். குஜராத் முதல்வர் ஆனந்திபென் பாட்டீலை தாக்கிப் பேசி அவர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது கேஜ்ரிவால் கூறியதாவது: நான் இரண்டு நாட்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். இன்று சோம்நாத் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் நாளை சூரத்தில் நிகழ்சியொன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பாட்டீல் கொடுத்த நெருக்கடி காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பட்டேல் சமூதாயத்திற்காக போராடிய ஹர்திக் பட்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் எக்நாத் காட்ஷி மீது அது போன்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
எக்நாத் காட்ஷியின் செல்போனுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. இருந்த போதிலும் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அவர்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது என்று கூறினார்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது கேஜ்ரிவால் அங்குள்ள கிராமங்களான ஜுனாகத், கிர் சோம்நாத், மற்றும் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்தார். ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் விவசாயிகள் நல்ல முறையில் வழிநடத்தப்படுவார்கள் என கேஜ்ரிவால் உறுதியளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications