பாபர் மசூதி வழக்கு விசாரணையிலிருந்து அத்வானியை விடுவிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் தடாலடி
பாபர் மசூதி வழக்கில் சிபிஐ தாமதமாக மேல்முறையீடு செய்ததால் தங்களை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற அத்வானியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் புறம் தள்ளிவிட்டது.
டெல்லி: விசாரணை நடத்தாமலேயே, பாபர் மசூதி வழக்கிலிருந்து அத்வானியை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சதி திட்டம் தீட்டியதாக பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், இவர்கள்தான் பாபர் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டினர் என்பதற்கான ஆதாரம் இல்லை என கூறி 2001ல் அத்வானி உள்ளிட்டோரை, விடுதலை செய்ததது. மேல்முறையீட்டின்போது, அலகாபாத் ஹைகோர்ட்டும் 2010ல் அந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு வெளியான 9 மாதங்கள் கழித்து, சி.பி.ஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரிக்க கூடாது என்றும், தங்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அத்வானி உள்ளிட்ட, இவ்வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
சிபிஐ தாமதமாக மேல்முறையீடு செய்ததால் அந்த அடிப்படையில் தங்களை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக இருந்தது. ஆனால், இதுபோன்ற டெக்னிக்கல் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதையடுத்து அத்வானி உள்ளிட்டோர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications