திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரி கே.ஜே.யேசுதாஸ் கடிதம்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமது கேட்டு பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
யேசுதாஸின் சினிமா பாடல்களை காட்டிலும் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் அவர் பாடிய ஹரிவராசனம் பாடல் இன்றும் சுவாமிக்கு தாலாட்டு பாடுவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். இவர் பத்மநாப சுவாமி கோயிலில் வரும் செப் 30- ஆம் தேதி விஜயதசமி அன்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி கோயில் நிர்வாகத்துக்கு யேசுதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

வேற்று மதத்தினருக்கு சில கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் யேசுதாஸ் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகம்தான் இறுதி முடிவை எடுக்கும்.
இந்த கோயிலை பொருத்தமட்டில் ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதாகும். திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனுக்காக யேசுதாஸ் ஏராளமான பாடல்களை பாடியிருந்தாலும் அவர் இதுவரை குருவாயூரப்பனை தரிசனம் செய்ததில்லை. அதற்கு காரணம் வேற்று மதத்தினருக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யேசுதாஸ் கலையுலகிற்கு வந்து 56-ஆவது ஆண்டை முன்னிட்டு 14 மொழிகளில் லட்சத்துக்குமான பாடல்களை பாடியுள்ளார். 1975-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2002-இல் பத்மபூஷன் விருதும், 2017-இல் பத்மவிபூஷன் விருதும் யேசுதாஸுக்கு வழங்கப்பட்டன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications