எல்லாத்தையும் எடுத்துக்கங்க சித்தப்பு... அகிலேஷ் ஐஸ் வைத்தும் இறங்கி வராத ஷிவ்பால்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டிருந்த குடும்பத் தகராறு முற்றியிருந்த நிலையில், எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பாவும் கட்சியின் தலைவருமான ஷிவ்பாலுக்கு ஐஸ் வைத்துப் பேசியுள்ளார். ஆனாலம் ஷிவ்பால் சமாதானம் ஆகவில்லை. கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் அவர் விலகி விட்டார்.
கடந்த 3 நாட்களாக உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் அகிலேஷ்க்கும் அவரது சித்தாப்பாவிற்கு கருத்து வேறுபாடு எற்பட்டு அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் அகிலேஷ் தனது சித்தப்பாவை சமாதானப்படுத்த இறங்கிப் பார்த்தார். நீங்கள் என் சித்தப்பா. உங்களுக்குத்தான் எல்லாம் என்று கூறியும் ஷிவ்பால் சமாதாம் ஆகவில்லையாம்.

இதற்கிடையே, அமர்சிங் மீது அகிலேஷின் கவனம் திரும்பியுள்ளது. தற்போதைய குழப்பத்துக்கு அவரே காரணம் என்பது அகிலேஷின் எண்ணம். வெளியாட்கள் தலையீடு இருந்தால் கட்சியை நடத்துவது சிரமம் என்று மறைமுகமாக அமர்சிங்கைத் தாக்கியுள்ளார் அகிலேஷ்.
எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையோ, சண்டையோ ஏற்படவில்லை. ஆட்சி மற்றும் அரசு ரீதியாகத்தான் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன என்றும், எனது தந்தையும், கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றுதான் நான் எப்போதும் ஆசைப்படுகிறேன் என்றும் அகிலேஷ் கூறியிருந்தார். மேலும், குடும்ப விஷயங்களைப் பொருத்தவரையில் நேதாஜி வார்த்தைப்படிதான் அனைவரும் நடக்கிறார்கள். நானும், அவர் கூறியபடிதான் நடப்பேன் என்று உறுதியாக சொல்லியிருந்தார்.
.
ஆனாலும் கட்சி, ஆட்சி விஷயத்தில் வெளிநபர்கள் தலையிட்டால் எதுவுமே சரியாக நடக்காது. நான் யாரையெல்லாம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினேனோ, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அகிலேஷ் யாதவ் மறைமுகமாக அமர் சிங்கை தாக்கி பேசியுள்ளார்.
சமாஜவாதி ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்ற அமர் சிங், மாநில அரசில் தலைமைச் செயலராக இருந்து அகிலேஷ் யாதவால் நீக்கப்பட்ட தீபக் சிங்கால் ஆகியோர் கட்சியில் தனக்கு எதிராக சதி செய்கின்றனர் என்பதும், சிவ்பால் சிங் யாதவ் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் தீபக் சிங்காலுடன் தொடர்ந்து நெருக்கமாக உள்ளனர் என்பதும் அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டாக இருந்தது.
இதனால் கட்சி நிறுவனரும் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் கோபமடைந்தார். இதையடுத்து கடந்த 3 மூன்று நாட்களாக மாறி மாறி பதவி பறிப்புகள் அரங்கேறின. இந்த நிலையில் தனது சித்தப்பாவை சமாதானப்படுத்த அகிலேஷ் முயன்றார். ஆனால் அதில் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?











Click it and Unblock the Notifications