Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2028 பருவநிலை மாநாடு இந்தியாவில் நடத்த வேண்டும்! சர்வதேச தலைவர்கள் முன் அழுத்தமாக பேசிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

துபாய்: அமீரகத்தில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, "வரும் 2028- ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் காப்-33 உலக பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கூறினார்.

உலகம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினை காலநிலை மாற்றம்தான். உலகம் முழுவதும் பருவம் தவறிய மழை, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பருவநிலை மாறுபாடுக்கு முக்கிய காரணம் என்பது பூமி வெப்பமடைவது தான். புவி வெப்பமடைவதை தடுக்க அனைத்து நாடுகள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

2028-climate-summit-should-be-held-in-india-prime-minister-modi-propose-at-cop-28-at-dubai

அந்த வகையில், பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற பிரச்சனைகளை சரிசெய்ய பல உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு தொடங்கியது.

இந்த மாநாட்டை அமீரக அமைச்சரும் காப்-28 மாநாட்டின் தலைவருமான சுல்தான் ஜாபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஐ.நா. உச்சி மாநாட்டு வளாகத்தின் நீல மண்டலத்தில் பல்வேறு நாடுகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியும் துபாய் சென்றார். உலக பருவநிலை உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- இந்தியா உலக அளவில் 4 % குறைவான அளவே கார்பன் உமிழ்தலில் பங்கு வகிக்கிறது. உலக நலனுக்காக அனைவரது நலன்களையும் பாதுகாப்பது அவசியம். உறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்குகளை எட்டியுள்ளது.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாசு உமிழ்வை 45 சதவீதம் குறைக்கவும், புதைபடிவமற்ற (பெட்ரோலிய எரிபொருள் அல்லாத) எரிபொருட்களின் பங்கை 50 சதவீதம் அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டின் தவறுகளை சரி செய்ய நமக்கு அதிக நேரம் இல்லை. வரும் 2028-ம் ஆண்டில் நடக்க இருக்கும் காப்-33 உலக பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்று நடத்த விரும்புகிறோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+