சிங்கத்துடன் காரில் ஜாலி ட்ரிப் போன பாகிஸ்தான் தொழிலதிபர்... கிலியான மக்கள்!
தனியார் உயிரியல் பூங்கா நடத்தி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஜாலியாக சிங்கத்தை காரில் ட்ரிப் அழைத்து சென்றதால் சிறை தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.
கராச்சி : திறந்தவெளி காரில் சிங்கத்தை ஏற்றி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சென்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் சக்லைன் ஜாவித். தொழிலதிபரான இவர், மிருகக் காட்சி சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்றை தனது காரின் பின் பகுதியில் அமர வைத்து, கராச்சி நகரில் ஜாவிதி நேற்று இரவு உலா வந்துள்ளார்.

காரில் சிங்கத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சாலையில் ஆட்டோ, டூவிலர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் பீதியடைந்தனர். சிங்கம் பாய்ந்து வந்துவிடுமோ என்கிற பயத்திலேயே பலர் சாலையில் ஓரமாக பயணித்தனர். இந்தச் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலலு வெளியிட்டதால் பரபரப்பானது.
இந்த வீடியோ ஆதாரத்தின்படி ஜாவித் கைது செய்யப்பட்டார். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் மிருகக் காட்சி சாலை நடத்திவரும் ஜாவித், சிங்கத்தை காரில் ஏற்றிச் சென்றது ஏற்க முடியாததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் ஜாவித் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஜாமினில் வெளிவந்தார். ஜாவித் சிங்கத்துடன் ஜாலி ட்ரிப் போன வீடியோவை பார்த்து நீங்களும் ரசியுங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications