’ஷாக்’ சீனாவில் இருந்து உ.பி திரும்பியவருக்கு கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
பீஜிங்: சீனாவில் பிஎப் 7 வகை உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி உலுக்கி வரும் நிலையில், அந்த நாட்டில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வந்த இந்தியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த நபரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்த வேளையில் சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனாவால் அந்த நாடு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கூட சொல்லப்படுகிறது.

அதிவேகமாக பரவும் பிஎப் 7
தினசரி பாதிப்பு கடந்த வாரத்தில் கோடியை தாண்டியதாக கூட சில தகவல்கள் வெளியாகின. இதனை மூடி மறைக்கும் விதமாக தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடப் போவது இல்லை என்று சீனா அறிவித்துள்ளது. இது ஒருபுறம் சீனாவில் பரவி வரும் ஒமிக்ரானின் மாறுபாடு வகை கொரோனாவான பிஎப் 7 அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் உலக நாடுகள் உஷார் ஆகியுள்ளன.

ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டாயம்
இந்தியாவிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூட பேசியிருந்தார். அதேபோல சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் வந்த நபருக்கு தொற்று உறுதி
அதேபோல், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை தயார் நிலைகளை சரிபார்க்கும் விதமாக வரும் 27 ஆம் தேதி ஒத்திகை நடத்தவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் இருந்து உத்தர பிரதேசம் வந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 40-வயதான அந்த நபர் டெல்லி வழியாக ஆக்ராவுக்கு வருகை தந்துள்ளார்.

எந்த வகை கொரோனா
கடந்த 23 ஆம் தேதி ஆக்ரா திரும்பிய நபர் தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து எந்த வகை கொரோனா என்பதை கண்டறிவதற்காக மரபணு ஆய்வகத்திற்கு அவரது மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட அந்த நபர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக தலைமை மருத்துவ அலுவலர் அருண் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை
அருண் ஸ்ரீவத்சவா மேலும் கூறுகையில், "ஆக்ராவில் உள்ள குடியிருப்பு வாசிகள் முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சனிடைசர் போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்த வேண்டு. தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை டோசையும் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு மக்கள் உடனடியாக 0562-2600412, 9458569043- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தார். அதேபோல், ஆக்ராவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications