பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற சம்பவம்.. குட்டு வைத்த இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் பரபர அட்டாக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், இந்து பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் திருமணமான இந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தப்பட்டவருக்கே மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அதேபோல சீக்கிய ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டவருக்கே திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்தியா தனது கண்டனத்தை வலுவாக பதிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அராஜக சம்பவங்கள்
இஸ்லாமிய மதநெறிகளை தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இவ்வாறு இருக்கையில், அந்நாட்டில் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற அராஜக செயல்களுக்கு இந்தியா தரப்பில் வலுவான கண்டனங்களை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கொலை
சில நாட்களுக்கு முன்னர், சிந்து மாகாணத்தின் நரஸ்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருமணமான பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டவருக்கே திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமையும் அரங்கேறியது. அதேபோல கடந்த மார்ச் மாதம் தன்னுடைய காதலை ஏற்காததால் அந்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பூஜா குமாரி எனும் இந்து பெண்ணை சுட்டு கொலை செய்தார். இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 20ம் தேதி, கைபர் பக்துன்கவா மாகாணத்தை சேர்ந்த சீக்கிய ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டவருக்கே திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

கடத்தல், கட்டாய மதமாற்றம்
இந்த தொடர் தாக்குதல்கள், கடத்தல், கட்டாய திருமண சம்பவங்கள் அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால் சிங் லால்புரா, இந்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று என்று கோரிக்கை விடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

பதில் கடிதம்
தற்போது இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்த சம்பவம் குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் இந்தியா தரப்பில் அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications