10 வயது சிறுவனுக்கு லிங்கன் எழுதிய அரிய கடிதம்... ரூ.14.5 கோடிக்கு ஏலம்!
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம் ஒன்று தற்போது ரூ. 14.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மாபெரும் மனிதர்களில் ஒருவர் ஆபிரகாம் லிங்கன். இவர் கடந்த 1865ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு தனது உள்துறை அமைச்சர் ஜான் யூசரின் மகனான லின்டன் யூசர் என்ற 10 வயது சிறுவனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் லிங்கன்.

அந்தக் கடிதத்தை அவர் தனது கைப்பட எழுதி, கையொப்பமும் இட்டிருந்தார். மேலும் அதில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற போது தான் பேசிய உரையின் கடைசி பகுதியிலிருந்து சுமார் 13 வரிகளை எழுதியிருந்தார்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போதும் இக்கடிதத்தை யூசர் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்தக் கடிதம் நேற்று முன்தினம் ஹெரிடேஜ் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்ட து. அப்போது இந்தக் கடிதம் 22.13 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் 14.5 கோடி ரூபாய் ஆகும். ஏலத்தில் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இதுபோன்று 5 கடிதங்களே இருப்பதால் இது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications