மோசமாகும் நிலைமை.. இந்தியர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
Recommended Video
இதுவரை மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 8ஐ கைப்பற்றிவிட்டதால் நிலைமை அங்குமோசமாகி உள்ளது. இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது,
ஆப்கானிஸ்தானில் 2001 ஆண்டில் தொடங்கிய உள்நாட்டு போர், அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தால் மீண்டும் மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது.

கைவிட்ட அமெரிக்கா
ஒசாமா பின்லேடனை கொன்றதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதிய அமெரிக்கப் படைகள், கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கின. இந்நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக வெளியேற உள்ளன.

ஒரே நாளில் இரண்டு
இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திகொண்ட தலிபான்கள் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான சண்டையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் 8 மாகாண தலைநகரங்களை கைப்பற்றி அதிர்ச்சி அளித்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு மாகாண தலைநகரங்களை கைப்பற்றி உள்ளனர். இதுவரையில் மொத்தமுள்ள 34 மாகாண தலைநகரங்களில் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறார்கள்.

ஆப்கன் கோரிக்கை
தலிபான்களை ஒடுக்க அமெரிக்கா கிட்டத்தட்ட கைவிரித்துவிட்டது. இந்தியாவின் உதவியை அது நாடி உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹனீப் ஆத்மர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான தொலைபேசி உரையாடலின் போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.

இந்திய அரசு உத்தரவு
இதனிடையே இந்திய குடிமக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது. வணிக விமான சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன், தாய்நாடு திரும்புவதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications