Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. அடிமைகளா? - மேற்கத்திய நாடுகளுக்கு இம்ரான் கான் கண்டனம்

ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கராச்சி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதிய நிலையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Ukraine VS Russia | கோபத்தில் இம்ரான்கான் | புதினுக்கு போன் போட்ட மோடி | Oneindia Tamil

    உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ஆம் தேதி போர் தொடுத்தது. தற்போது வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வந்த போதிலும், போரை நிறுத்த முடியவில்லை. உக்ரைன் தனி ஒரு நாடாக நின்று சமாளித்து வருகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது. கீவ், கார்கிவ் நகரங்களைக் கைப்பற்ற ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    ரஷ்யா தாக்குதல்

    ரஷ்யா தாக்குதல்

    அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாகப் போராடி வருகிறது. எனவே, இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் தவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

    போர் நடந்து கொண்டிருக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. அப்போது ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டு வந்தன. இந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

    தூதரக அதிகாரிகள் கடிதம்

    தூதரக அதிகாரிகள் கடிதம்

    வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கடந்த 1ஆம்தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள வடக்கு நாடுகளில் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் ஐ.நா. வாக்கெடுப்பின்போது பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தக் கடித விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாங்கள் அவர்களின் அடிமைகளா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இம்ரான்கான் கண்டனம்

    இம்ரான்கான் கண்டனம்

    இதுகுறித்து பேசியுள்ள இம்ரான்கான், அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. நாம் அவர்களுடைய அடிமைகளா? அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதை செய்ய வேண்டுமா? ஐரோப்பிய யூனியன் தூதர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர்கள் இந்தியாவுக்கு இதுபோன்று கடிதம் எழுதினார்களா?'' என்று கேட்டுள்ளார்

    எந்த முகாமிலும் இல்லை

    எந்த முகாமிலும் இல்லை

    மேலும், நாங்கள் ரஷ்யாவுடன் நட்பாக இருக்கிறோம். மேலும் அமெரிக்காவுடனும் நட்பாக இருக்கிறோம். சீனா, ஐரோப்பா நாடுகளுடனும் நட்பாக இருக்கிறோம். ஆனால், எந்த முகாமிலும் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கு நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. அதனால் நன்றி கிடைப்பதற்குப் பதிலாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+