இத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்!
ரோம்: இத்தாலியில் சிறு கப்பல் ஒன்று மூழ்கியதில் 14 பேர் பலியாகி உள்ளதாகவும், 200 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலியில் அகதிகளாக இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வட ஆப்பிரிக்கர்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக கப்பல் ஒன்று லம்பெடுசா தீவுக்கு சென்றது. இந்நிலையில், லம்பெடுசா தீவுக்கு சுமார் 185 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது அது கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 215 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, லம்பெடுசா துறைமுக கேப்டன் கூறுகையில், ''கப்பலில் எத்தனை பேர் வந்தனர் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், உயிர் பிழைத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்தோம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.
கடந்த வார இறுதியில் லிபியக் கடலோரமாக ஒர் படகு கவிழ்ந்து 36 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று பரபரப்பு அடங்கும் முன்னரே மீண்டும் அகதிகளாக வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது மீட்புப் பணியில் இரு யுத்தக் கப்பல்களும் ஒரு ஹெலிகாப்டரும் லிபியக் கப்பற்படையால் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
ஐரோப்பிய யூனியனுக்கு ஆப்பிரிக்கவில் இருந்து அகதிகளாக புலம் பெயர்பவர்கள் நுழையும் முக்கிய கேந்திரமாக லிபியா விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு லம்பெடுசாவுக்கு அருகே இரு படகு விபத்துக்களில் 400 இற்கும் அதிகமான புலம்பெயர்வோர் கொல்லப் பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 20 வருடங்களில் ஐரோப்பாவுக்கு அகதிகளாக வர முயற்சி செய்த 20000 பேர் கடலில் பலியானதாக புள்ளி விபரம் கூறுகின்றது.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்குள் 2000 அகதிகளை மீட்டிருப்பதாக இத்தாலி இராணுவம் அறிவித்துள்ளது. லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடலின் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழையும் தஞ்சம் தேடுபவர்கள் பெரும்பாலும் எரிட்ரியா, சோமாலியா, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications