பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; 100 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் சனிக்கிழமை மாலை குண்டுவெடித்ததில் 43 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கராச்சி: பாகிஸ்தானில் உள்ள லாஸ்பெல்ல என்ற இடத்தில் மசூதியில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெல்லா என்ற இடத்தில் ஷா நூரானி என்ற பள்ளி வாசல் உள்ளது. இங்கு 500 பேர் நேற்று மாலை தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர். அப்போது பள்ளி வாசல் அருகே பயங்கர சத்தத்துடன் திடீரென குண்டுவெடித்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 43 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 ஆம்புலன்ஸ் வாகனமங்களும் விரைந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications