ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் கொட்டித்தீக்கும் கனமழையால் ஜெர்மனியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பருவ நிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்கிறது.

மறுபுறம் பருவம் தவறிப் பெய்யும் கன மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்குகளும் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

வெள்ளம்

வெள்ளம்

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு ஐரோப்பா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் இருக்கும் வீடுகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் குறிப்பாக ஜெர்மனி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

42 பேர் பலி

42 பேர் பலி

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெர்மனி நாட்டில் மட்டும் குறைந்தபட்சம் 42 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மீட்புப் பணிகளில் அந்நாட்டின் ராணுவமும் போலீசாரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழப்பு அதிகரிக்கலாம்

உயிரிழப்பு அதிகரிக்கலாம்

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள நீர் சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். ஜெர்மனி நாட்டில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான வெள்ள பாதிப்பாக இது கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால் உயிரிழப்புகள் மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

அண்டை நாடுகள்

அண்டை நாடுகள்

உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த வெள்ளத்தால் ஜெர்மனி மட்டுமின்றி இதர ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெல்ஜியம் நாட்டில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. ஆபத்தான பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதேபோல நெதர்லாந்திலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+