பாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது கல்வீசி தாக்குதல்.. வன்முறை கும்பலிடம் சிக்கிய பக்தர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் வழிபாட்டிடத்தில் கல் வீசி சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நங்கனா சாஹிப்பில் அமைந்துள்ளது அந்த குருத்வாரா. இங்குதான் சீக்கிய மத நிறுவனரான, குருநானக் பிறந்தார். எனவே, இது சீக்கியர்களுக்கு புனித இடமாக கருதப்படுகிறது.

குருநானக் 550வது பிறந்த வருடத்தையொட்டி, குருத்வாராவிற்கு ஏராளமான சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான், குருத்வாரா மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, யாத்தரீகர்கள் நிலைமை என்னவானதோ என்ற பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், கல் வீச்சு சம்பவம் குறித்து தலையிடுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் வாயிலாக இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
Appeal to @ImranKhanPTI to immediately intervene to ensure that the devotees stranded in Gurdwara Nankana Sahib are rescued and the historic Gurdwara is saved from the angry mob surrounding it.https://t.co/Cpmfn1T8ss
— Capt.Amarinder Singh (@capt_amarinder) January 3, 2020
ஷிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதலும் இந்த சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை டுவிட்டரில் தெரிவித்தார். குருநானக் தேவ் பிறப்பிடமான குருத்வாரா மீதான தாக்குதல் ஒரு இழிவான செயல், இதை பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸதான் பிரதமரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தானில் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணும் என நம்புகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications