பாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்!
கனடா நாட்டில் சாலையில் நின்று கத்திய நபருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் விசாரணையில் தான் கத்தவில்லை பாடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
டொராண்டோ: கனடா நாட்டில் சாலையில் நின்று கத்திய நபர் மீது ''பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தார்'' என வழக்கு பதியப்பட்டு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் போலீஸ் விசாரணையில் தான் கத்தவில்லை பாடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கனடா நாட்டின் ஓட்டவா என்ற பகுதியை சேர்ந்தவர் 'தவ்ஃபிக் மோயல்லா'. 38 வயது நிரம்பிய இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரில் டொராண்டோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனக்கு பிடித்த 90 களில் வந்த பாடல்களை பாடிக்கொண்டு சென்று இருக்கிறார். காருக்குள் மிகவும் சத்தமாக பாடிக் கொண்டு சென்றது வெளியில் இருந்த பலருக்கும் கேட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கனடா போலீசார் அவரது காரை பின் தொடர்ந்து வந்து மடக்கிப் பிடித்து அவரை கைது செய்து இருக்கின்றனர். அப்போது அவர்கள் தவ்ஃபிக் மோயல்லாவிடம் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாக கத்தியதால் உங்களை கைது செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் நான் கத்தவில்லை எனக்கு பிடித்த பாடலைத்தான் பாடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் நீதிமன்றத்தில் பேசிய போது ''நான் எனக்கு பிடித்த 90களில் வந்த சில பாட்டுக்களை பாடிக் கொண்டு வந்தேன். ஆனால் அந்த பாடல் யாருக்கும் எந்த வகையிலும் இடையூறாக இருக்க வாய்ப்பு இல்லை. நான் பொதுவாக ஆடிக்கொண்டே பாடுவது வழக்கம். காரில் இருந்ததால் ஆட முடியவில்லை. நான் யாரையும் தொந்தரவு செய்யவில்லை'' என்று கூறினார்.
இவரின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் இவருக்கு அபராதம் விதித்தது. அதன்படி இவருக்கு ''பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தார்'' என்ற சட்டத்தின் படி தண்டனை வழக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் 8000 ரூபாய் அபராதமாக கோர்ட்டிற்கு அடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications