இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு
சான்டியகோ: இஸ்ரோல், பாலஸ்தீனம் இடையே மோதல் உள்ளது. இந்நிலையில் தான் தனிநாடாக இயங்கி வரும் பாலஸ்தீனத்தில் சிலி நாட்டின் தூதரகம் அமைக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக பாலஸ்தீனம் உள்ளது. இஸ்ரேலின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்கினர். பாலஸ்தீனம் நாட்டின் தலைநகரான ஜெருசலேம் உள்ளது.
இங்கு அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாலஸ்தீனத்தில் 44.20 லட்சம் வசித்து வருவதாக கூறப்பட்டது. பாலஸ்தீனம் இன்னும் முழுமையாக சுதந்திர நாடாக அறிவிக்கப்படவில்லை.

பாலஸ்தீன பிரச்சனை
இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து பிரிந்ததால் அந்த நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை, ராக்கெட் குண்டுகள் வீசப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பாலஸ்தீனம் தனிநாடாக கூறி கொண்டாலும் கூட அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அமெரிக்கா உள்பட ஒட்டுமொத்த உலக நாடுகளும் கூட பாலஸ்தீனம் விவகாரத்தில் அமைதி காத்து தான் வருகின்றன. ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் கூட பாலஸ்தீனத்துக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

சிலி நாட்டில் அதிக பாலஸ்தீனர்கள்
இந்நிலையில் தான் பாலஸ்தீனத்தை தாண்டி வெளிநாடுகளிலும் அந்நாட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதில் முதல் இடத்தில் சிலி நாடு உள்ளது. இங்கு அதிகளவில் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நாட்டுக்கு நடந்த தேர்தலில் புதிய ஜனாதிபதியாக கேப்ரியல் போரிக் தேர்வு செய்யப்பட்டார். இங்கு ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாக உள்ள நிலையில் 2022 மார்ச் முதல் கேப்ரியல் போரில் அந்த பதவியில் உள்ளார். இவர் இடதுசாரி சிந்தனை கொண்டவர்.

தூதரகம் தொடங்க திட்டம்
இந்நிலையில் தான் கிறிஸ்துமஸ் நெருங்கும் நிலையில் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ‛‛ சிலி நாட்டில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் வசதிக்காக பாலஸ்தீனத்தில் சில நாட்டுக்கான தூதரகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. '' என கூறியுள்ளார்.

தொடரும் ஆதரவு
பாலஸ்தீனத்துக்கு எப்போதும் சிலி நாடு ஆதரவு தெரிவித்து வருகிறது. சிலி நாட்டின் ரமல்லாவில் கடந்த 1998 ல் பாலஸ்தீனத்துக்கான பிரதிநிதி அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பிறகு 2011ல் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து யுனெஸ்கோவில் நுழைய ஆதரவு வழங்கியது. தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில் தற்போதைய புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications