கடலுக்கு மேலே 350 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில்! சீனாவின் தரமான சம்பவம்..வாயை பிளக்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: சீனா கடலுக்கு மேலே பாலங்களை அமைத்து அதில் புல்லட் ரயிலை இயக்கி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் புல்லட் ரயில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா தன்னை மீண்டும் முதலிடத்தில் நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் ரயில்கள் என்பது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பாகும். ஒரு ஊரையே நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு கொண்டு சேர்க்கும் திறன் உள்ள ஒரு வாகனம்தான் ரயில். தொடக்கத்தில் நிலக்கரி சுரங்கத்திலும், போருக்காகவும் போடப்பட்ட இந்த ரயில் பாதைகள் மெல்ல மெல்ல மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. வந்த வேகத்திலேயே புதிய புதிய அவதாரங்களை இந்த ரயில்கள் எடுத்தது. தற்போது இது புல்லட் ரயில் எனும் பரிணாமத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பான்தான் கோலோச்சியிருந்தது. ஆனால் தற்போது சீனா உருவாக்கியுள்ள புல்லட் ரயில்கள் ஒட்டு மொத்த உலக நாடுகளையே மெர்சலடைய வைத்துள்ளன. அந்த வகையில் நேற்று தென்கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவையை சீனா தொடங்கியது. இந்த ரயில் கடலுக்கு மேலே பயணிக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
தைவான் ஜலசந்தியின் மேற்கு கடற்கரையில் உள்ள புஜியன் நகரின் தலைநகர் ஃபுஜோ மற்றும் வணிக மையமான ஜியாமென் உட்பட 5 நகரங்களை இந்த ரயில் இணைக்கிறது. குறிப்பாக ஃபுஜோ-ஜியாமென் இடையே உள்ள 277 கி.மீ தொலைவை இந்த ரயில் வெறும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இந்த புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. இவ்வளவு வேகத்தில் ரயில் செல்கிறது எனில் அதற்கான பாதைகள் பலமாக இருப்பது அவசியமாகும்.
இந்த ரயில் பாதைக்கான கட்டமைப்புகளை சீனா கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த கட்டுமானங்கள் அனைத்தும் நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நீண்ட காலத்திற்கு இந்த வழியாக புல்லட் ரயில் இயக்கப்படும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். என்னதான் உலகின் சில நாடுகளில் இந்த புல்லட் ரயில் சேவைகள் இருந்தாலும், இந்த ரயில் தடத்தின் ஒட்டுமொத்த தூரங்களில் 3ல் 1 பங்கு சீனாவில்தான் இருக்கிறது.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புல்லட் ரயில் பாதைகள் நீடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 2,500 கிமீ அளவுக்கு பாதைகள் நீடிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் புல்லட் ரயில் பாதையின் தூரம் 44,500 கிமீ ஆக அதிகரித்திருக்கிறது. இது 2025ம் ஆண்டில் 50,000 கி.மீ அளவுக்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications