கடலுக்கு மேலே 350 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில்! சீனாவின் தரமான சம்பவம்..வாயை பிளக்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: சீனா கடலுக்கு மேலே பாலங்களை அமைத்து அதில் புல்லட் ரயிலை இயக்கி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் புல்லட் ரயில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா தன்னை மீண்டும் முதலிடத்தில் நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் ரயில்கள் என்பது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பாகும். ஒரு ஊரையே நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு கொண்டு சேர்க்கும் திறன் உள்ள ஒரு வாகனம்தான் ரயில். தொடக்கத்தில் நிலக்கரி சுரங்கத்திலும், போருக்காகவும் போடப்பட்ட இந்த ரயில் பாதைகள் மெல்ல மெல்ல மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. வந்த வேகத்திலேயே புதிய புதிய அவதாரங்களை இந்த ரயில்கள் எடுத்தது. தற்போது இது புல்லட் ரயில் எனும் பரிணாமத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பான்தான் கோலோச்சியிருந்தது. ஆனால் தற்போது சீனா உருவாக்கியுள்ள புல்லட் ரயில்கள் ஒட்டு மொத்த உலக நாடுகளையே மெர்சலடைய வைத்துள்ளன. அந்த வகையில் நேற்று தென்கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவையை சீனா தொடங்கியது. இந்த ரயில் கடலுக்கு மேலே பயணிக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
தைவான் ஜலசந்தியின் மேற்கு கடற்கரையில் உள்ள புஜியன் நகரின் தலைநகர் ஃபுஜோ மற்றும் வணிக மையமான ஜியாமென் உட்பட 5 நகரங்களை இந்த ரயில் இணைக்கிறது. குறிப்பாக ஃபுஜோ-ஜியாமென் இடையே உள்ள 277 கி.மீ தொலைவை இந்த ரயில் வெறும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இந்த புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. இவ்வளவு வேகத்தில் ரயில் செல்கிறது எனில் அதற்கான பாதைகள் பலமாக இருப்பது அவசியமாகும்.
இந்த ரயில் பாதைக்கான கட்டமைப்புகளை சீனா கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த கட்டுமானங்கள் அனைத்தும் நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நீண்ட காலத்திற்கு இந்த வழியாக புல்லட் ரயில் இயக்கப்படும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். என்னதான் உலகின் சில நாடுகளில் இந்த புல்லட் ரயில் சேவைகள் இருந்தாலும், இந்த ரயில் தடத்தின் ஒட்டுமொத்த தூரங்களில் 3ல் 1 பங்கு சீனாவில்தான் இருக்கிறது.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புல்லட் ரயில் பாதைகள் நீடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 2,500 கிமீ அளவுக்கு பாதைகள் நீடிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் புல்லட் ரயில் பாதையின் தூரம் 44,500 கிமீ ஆக அதிகரித்திருக்கிறது. இது 2025ம் ஆண்டில் 50,000 கி.மீ அளவுக்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications