சீனாவில் 'ராணுவ டாங்கர்' வடிவமைத்தவருக்கு என்ன நேர்ந்தது?- சுவாரஸ்ய நிகழ்வு
பழைய டிரக்கை டாங்கராக மாற்றிய திறமையை பெருமையுடன் இணையதளத்தில் பதிவிட்டவருக்கு பாராட்டுக்கு பதில் அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
சி.சி.டி.வி நியூஸ் வெளியிட்ட செய்திகளின்படி, சீனாவில் தெற்கு குவான்ஷி மாகாணத்தில் லெபின் என்ற நகரில் வசிக்கும் ஹிவாஹிங் என்பவர் இரண்டு மாதம் உழைத்து தனது பழைய டிரக்கை டாங்கராக வடிவமைத்தார்.
அதில் ஒரு துப்பாக்கி மற்றும் ரேடார் டிஷ்ஷையும் பொருத்தினார். தனது திறமையும் உழைப்பையும் பறைசாற்றும் விதமாக அதை அவர் இணையத்தில் வெளியிட்டார்.
சி.சி.டி.வி செய்திகளின்படி, அவர் தனது நண்பருக்கு சமூக ஊடகம் மூலம் டாங்கரின் புகைப்படத்தை அனுப்பினார். ஆனால், சமூக ஊடகங்களை கூர்ந்து கவனித்து வரும் சீன அதிகாரிகளின் கண்ணிலும் டாங்கர் புகைப்படம் தென்பட்டது.
தனது புதிய டாங்கரை சாலையில் களம் இறக்க முடிவு செய்திருந்த ஹிவாஹிங், அதற்கு முன்னரே ஜனவரி 22ஆம் தேதியன்று போலிசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
உரிமம் ரத்து
ஊடக தகவல்களின்படி, ஹிவாஹிங்குக்கு 1750 யுவான் (இந்திய மதிப்பில் 17,805 ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
ஹிவாஹிங்கிற்கு 'பாதுகாப்பு அறிவு' பற்றி சோதனை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ''சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டங்களை மீறியது, பிறருக்கு ஆபத்து ஏற்படுத்துவது'' போன்ற குற்றங்களை செய்திருப்பதாக ஹிவாஹிங் மீது குற்றம் சாட்டப்பட்ட்து.
ஹிவாஹிங் உருவாக்கிய டாங்கரை பறிமுதல் செய்து அதை அழிக்கப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: உலகை ஆளுமைப்படுத்தும் உள்நோக்கமா?
- சீனா: பெண்களுக்கான நல்லொழுக்கப் பள்ளிகள்
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ''ஹிவாஹிங் உருவாக்கிய டாங்கர், போலிசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக'' ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
''சாலைகள் டாங்கர்கள் செலுத்துவதற்கானவை அல்ல என்பது புரிந்துக்கொள்ளக் கூடியது கடினமான விடயம் அல்ல'' என்று மற்றொரு சமூக வலைதள பயன்பாட்டாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
''பல்வேறு ஆன்லைன் பிரபலங்களைப் போல இவரும் பிரபலமாகிவிட்டார்'' என்று மற்றொருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- மாலத் தீவில் 'அவசர நிலை': இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரை
- ஒற்றுமையை கற்றுத் தரும் ஓர் இஸ்ரேல் கிராமம்
- அம்மனுக்கு 'சுடிதார் அலங்காரம்': அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்த ஆதீனம்
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications