Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு வெற்றி: குல்பூஷன்சிங் ஜாதவ் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

தி ஹேக்: குல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் சவுக்கடி கொடுத்தார் நீதிபதி.

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ் . இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், வேவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

Court stays Jadhav's Execution

மேலும் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில் குல்பூஷணுக்கு கடந்த மாதம் 10-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை இந்தியா கடுமையாக கண்டித்தது. மேலும் அவரை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளும் அனுமதி மறுத்தது. குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு நகலையும் இந்திய அரசிடம் அளிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. மேலும் எந்த வித பின்விளைவுகளையும் சந்திக்க தயார் என்று பாக். பிரதமர் நவாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் சிங்கின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ஜாதவ் வழக்கை விசாரிக்க சர்வதேச கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. அவரை சந்திக்கவும் இந்திய தூதரகத்துக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.

வியன்னா சாசனத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை. எனவே குல்பூஷனுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அதன் மீதான விசாரணை இன்று நெதர்லாந்தில் ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தில் 3.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்க தொடங்கியது. சுமார் 11 நீதிபதிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது சர்வதேச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வாசிக்க தொடங்கினார்.

அதில், ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறாகும். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஜாதவ் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+