இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐ.நா.வில் அன்புமணி வேண்டுகோள்
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை பேரவையில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தினார்.
ஜெனீவா: ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34-வது கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையின் மீதான விவாதத்தில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் முன்னாள் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: கடந்த 2009ம் ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பிறகு 8 ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இலங்கை அரசு மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு போதுமானவையாக இல்லை என்றும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கவலையளிக்கும் அளவுக்கு மெதுவாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, இலங்கையில் நடைபெற்று வரும் விசாரணை நடைமுறை மீதான கண்காணிப்பை ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூடுதல் உத்வேகத்துடன் தொடர வேண்டியது அவசியமாகும்.

பன்னாட்டு நீதித்துறை
இலங்கைப் போரின் போதும், அதற்குப் பிறகும் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சிறப்பு கலப்பின நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதில் பன்னாட்டு நீதித்துறையினரை ஈடுபடுத்த வேண்டும் என்பதை ஆணையரின் அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.

படுகொலை செய்தவர்கள் விடுதலை
பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் போது, அதற்கு காரணமான ராணுவத்தினரை பலவீனமான, இன உணர்ச்சியூட்டப்பட்ட விசாரணை அமைப்பு தண்டிக்காது. கடந்த வாரம் கூட, 1997-ம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 10 இலங்கை படைவீரர்கள் தலைமை வழக்கறிஞரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்.

பிரிட்ஜோ சுட்டுக்கொலை
சொந்த நாட்டு மக்களை மட்டுமின்றி, அண்டை நாட்டு மக்களையும் படுகொலை செய்யும் அளவுக்கு இலங்கை துணிச்சலைப் பெற்றிருக்கிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்ஜோ என்ற தமிழக மீனவரை இலங்கைப் படையினர் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இலங்கைப் படை அட்டூழியம்
கடந்த 35 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்திருப்பதும், அந்தக் கொடுமை இன்னும் தொடர்வதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.

மைத்ரி பிடிவாதம்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் வகையில், இலங்கை போர்க்குற்ற விசாரணையில் பன்னாட்டு தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று இலங்கை அதிபரும், பிரதமரும் மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர்.

போர்க்குற்ற விசாரணை
இந்தக் கீழ்படியாமையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இலங்கை போர்க்குற்ற விசாரணையை ஐ.நா பொது அவை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐ.நா. மனித உரிமை பேரவை அனுப்ப வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு வலிமையாக பரிந்துரைக்கிறது.

பொதுவாக்கெடுப்பு
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தும் உரிமையையும், அதன் ஒரு கட்டமாக பொதுவாக்கெடுப்பின் மூலம் இப்பிரச்சினைக்கு நிலையானத் தீர்வு காண்பதற்கான உரிமையையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் பன்னாட்டு சமுதாயம் மதிப்பதற்கு இதுவே சரியான நேரம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications