ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டடங்கள் குலுங்கின
ஜப்பானில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மாலை 5 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இசுமி நகரில் இருந்து 30 தொலைவில் கடலில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் வீடுகள் குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications