இத்தாலி அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 200க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி
ரோம்: இத்தாலி அருகே கடலில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் சிரியா, எத்தியோப்பியா, சோமாலியா, ஆப்கானிஸ் தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின் றனர்.அவர்கள் சட்ட விரோத மாக படகுகளில் புறப் பட்டு வருகின்றனர். வழியில் இயற்கை பேரிடர்களால் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.

இதுபோன்ற துயர சம்பவம் இத்தாலி அருகே மத்திய தரைக் கடலில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் 4 படகுகளில் அகதிகளாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது அகதிகளை ஏற்றி வந்த 4 படகுகளும் கடலில் மூழ்கின. இதைப் பார்த்த இத்தாலி மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அப்படகுகள் மூழ்கிவிட்டன.
அதில் இருந்த 40 பேரை மட்டுமே மீட்பு படையினரால் மீட்க முடிந்தது. மீதமிருந்த சுமார் 400 பேர் கடலில் மூழ்கி விட்டனர். அவர்கள் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகவலை இத்தாலி அதிபர் செர்ஜியோ மாட்ட ரெல்லா தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கி பலியானவர்களில் 200க்கும் மேற்பட்டோர் சோமாலியாவை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மீட்கபட்டவர்கள் தற்போது கிரேக்க நாட்டிலுள்ள கலமாட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாங்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும், நடுக்கடலில் ஆள் கடத்தல்காரர்கள் தங்களை வேறொரு படகுக்கு மாறும்படி கூறினர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி மாறச்சொன்ன படகில் ஏற்கனவே 300 குடியேறிகள் இருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அந்தப் படகு மத்திய தரைக்கடலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கவிழ்ந்தது என மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications