பிள்ளைகளை தெருவில் திரிய விட்டு வீட்டில் செம தூக்கம் போட்ட அமெரிக்க "ஆத்தா"!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க: அமெரிக்காவில், தனது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றிக் கூட கவலைப்படாமல் அவர் பாட்டுக்கு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்து கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தி விட்டனர்.

விஷயம் என்னவென்றால், இந்த பெண்ணின் இரு மகள்களும் தங்களது விளையாட்டு சாமான்களை ஒரு டிராலியில் போட்டு ரோட்டுக்கு வந்து வீடு வீடாகப் போய் அதை விற்றுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவர்களிடம் வந்து விசாரித்தபோதுதான் விஷயம் தெரிய வந்தது.

Florida mom busted after girls discovered selling their toys: report

அந்த இரு சிறுமிகளும் ( வயது 7 மற்றும் 9) வெறும் காலுடன் டிராலி நிறைய பொம்மைகளுடன் தெருவில் சுற்றி வந்துள்ளனர். அப்படியே வீட்டை விட்டு கிட்டத்தட்ட வெகு தூரம் வந்து விட்டனர். அவர்களைப் பார்த்த இரண்டு போலீஸார் வந்து விசாரித்தபோது, எங்களது அம்மாவுக்கு உதவியாக பொம்மை விற்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர்.

அவர்களுக்கு அவர்களது வீட்டு முகவரியைச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் வீட்டை சரியாக அடையாளம் காட்டினர். காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களது தாயார் ஏப்ரல் எமெரி் (வயது 27) நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

அவரை எழுப்பிய காவலர்கள் நடந்ததைச் சொன்னபோது, உண்மையில் எனது மகள்கள்தான் என்னை எழுப்பியிருக்க வேண்டும். ஸ்கூலுக்குப் போகாமல், என்னையும் எழுப்பாமல், இப்படி நடந்து கொண்டு விட்டார்களே என்று கோபப்பட்டாராம்.

அதைக் கேட்டு புன்னகைத்துக் கொண்ட போலீஸார் ஏப்ரல் மீது சிறார்களிடம் அலட்சியம் காட்டியது என்ற வழக்கைப் போட்டு கைது செய்து கோர்ட்டுக்குக் கொண்டு போய் விட்டனர்.

பின்னர் அவர் 1000 டாலர் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டார். தற்போது இரு குழந்தைகளையும் அவர்களது தந்தையிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+