இஸ்ரேல்-ஹமாஸ் 5 மணி நேர யுத்த நிறுத்தம்! பதற்றத்துடன் வெளியே வந்த பொதுமக்கள்!
காஸா: ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பும் 5 மணி நேர யுத்த நிறுத்தத்தை கடைபிடித்தன. இந்த யுத்த நிறுத்த நேரத்தில் பொதுமக்கள் உணவுப் பொருட்களை வாங்க வீடுகளை விட்டு பதற்றத்துடன் வெளியேறினர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 9 நாட்களாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 226 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் குழந்தைகள்.

5 மணி நேர யுத்த நிறுத்தம்
இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் செரி, மனிதாபிமான அடிப்படையில் சிறிது நேரம் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமாறு இரு தரப்பிடம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் வெளியே வந்தனர்
இதை இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஏற்றுக் கொண்டன. இன்று காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை இந்த யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் காஸா பகுதி மக்கள் சற்றே நிம்மதியுடன் வெளிவந்தனர்.

சந்தைகளில் கூட்டம்
யுத்தம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க பெரும் கூட்டம் அலைமோதியது. எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இந்த நிலையில் தற்காலிக யுத்த நிறுத்தத்தின் போது ஒரு சில இடங்களில் இருதரப்பும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை
மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்த யுத்த நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

நாளை முதல் யுத்த நிறுத்தம்
இருதரப்பும் இதை உறுதிப்படுத்தாத நிலையில் நாளை முதல் காஸா பகுதி மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications