பாக். ராணுவ விமான தளங்கள் மீது தாக்குதல் - 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இரண்டு ராணுவ விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பத்து தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
நேற்று பாகிஸ்தானில் சுதந்திர விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமுங்கிலி மற்றும் காலித் ஆகிய இரண்டு விமானப்படை தளங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சமுங்கிலி விமானப்படை தளத்திற்குள் தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் மீது அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினரும் மாறி மாறித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில்5 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், காலித் ராணுவ விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ராணுவ தளத்தை தகர்க்க அவர்கள் வைத்திருந்த குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலீபான் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், கடந்த மாதம் ஜூன் மாதம் கராச்சியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 பேரும் கொல்லப்பட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications