மெட்ரோ ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்.. திக்திக் சிசிடிவி காட்சிகள்
பிரஸ்ஸல்ஸ்: சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பெண்ணை தள்ளிய திக்திக் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் காண்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் உள்ளது.
இந்நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திக்திக் காட்சி
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ரோஜியர் மெட்ரோ நிலையத்தில் தான் இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த 55 வயது மதிக்கத்தக்கப் பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் சுரங்க ரயில் பாதையில் வேண்டுமென்றே தள்ளிவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது
அந்த வீடியோவில் 55 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தண்டவாளம் அருகே ரயிலுக்குக் காத்திருக்கிறார். அப்போது சரியாக அந்த நிலையத்திற்குள் ரயில் வருவதைப் பார்த்த கருப்பு நிற உடை அணிந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை திடீரென தண்டவாளத்தின் மீது தள்ளிவிடுகிறார். நல்வாய்ப்பாக இதைச் சரியான நேரத்தில் பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக அவசர பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்துகிறார்.

காயமில்லை
இதையடுத்து உடனடியாக நடைமேடையில் இருந்த இரண்டு இளைஞர்கள் தண்டவாளத்தில் இறங்கி அந்த பெண்ணை மீட்டனர். இதனால் அந்தப் பெண் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதையடுத்து அந்த பெண் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பெண்ணுக்குக் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் அந்த இளைஞர்
மேலும், அந்த வீடியோவில் அப்பெண்ணைத் தள்ளிவிடும் முன்பு இளைஞர் பதற்றமாக இருப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனால் அந்த நபர் நீண்ட நேரமாக மெட்ரோ நிலையத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருக்கிறார். அப்போது தான் ரயில் வருவதைப் பார்த்ததும் திடீரென தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் உடனடியாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார். இருப்பினும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்த இளைஞரை அருகிலிருந்த மற்றொரு மெட்ரோ நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பாராட்டு
அந்த 23 வயது இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலின் ஓட்டுநர் மட்டும் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால், அப்பெண்ணுக்கு மோசமான காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் செயல்பட்ட அந்த ரயில் ஓட்டுநரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications