ஜப்பானைப் புரட்டிப் போட்ட புயல் மழை- 1 லட்சம் பேர் வீடுகளின்றி தவிப்பு; நீடிக்கும் அபாயம்!
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வந்த கடும் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதால் கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் வீடு தரைமட்டமாகி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொரு பெண் காரில் வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். மழை தொடர்பான சம்பவங்களில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 25 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒசாக்கி நகரில் சிபுய் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல் வயல்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. ரப்பர் படகுகளில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் ஷின்ஜோ அபே அமைச்சரவையை கூட்டி வெள்ள நிலைமை குறித்தும், மீட்புப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பின்னர் அமைச்சரவை செயலாளர் யோஷிடே சுகா, நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "அரசு நிர்வாகம், போலீஸ், ராணுவம் அனைவரும் ஓரணியில் திரண்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். எங்கள் சக்தியையெல்லாம் பயன்படுத்தி மீட்பு பணியை செய்வோம்" என கூறினார். இதற்கிடையே நாட்டின் வட பகுதிகளில் இன்னும் மழை அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications