ரஷ்யாவின் நம்பர் ஒன் இலக்கு நான் .. உக்ரைனை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் - உக்ரைன் அதிபர் உருக்கம்
கிவி: ரஷ்யாவின் இலக்கு நான் தான் என்றும், ஒருபோதும் உக்ரைனை விட்டு செல்ல மாட்டேன் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது நேற்று போர் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிர் பலி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் போர் உக்கிரமாக தொடர்ந்துவருகிறது. அனைத்து வழிகளிலும் உக்ரைன் மீது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவி வரை ரஷ்யா ஆக்கிரமித்து வந்துள்ளனர்.

உக்ரைன் அதிபர்
ரஷ்யா உக்ரைனில் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமேர் செலன்ஸ்கிரஷியா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், ''என்னை நம்பர் ஒன் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும்பம்தான் அவர்களின் இரண்டாவது இலக்கு. உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர். நான் இங்கு தான் இருக்கிறேன். இங்கிருந்து எங்கும் செல்ல மாட்டேன்.

கீவ்
கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனால், நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். கீவ் நகரை ரஷ்யா கைப்பற்றாமல் இருக்க கீவ் நகருக்கு வரும் அனைத்து வழிகளையும் உகரைன் தகர்த்து வருகிறது.

போர்
போர் தொடங்கி நடந்து கொண்டிருப்பதால், அந்நாட்டு 15 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் அனைவரும் ராணுவ வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் யாரும் போரில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் பத்திரமான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video

பயிற்சி
போரில் ஈடுபட உள்ள உக்ரைன் ஆண்களுக்கு ஏற்கெனவே ராணுவ பயிற்சி கொடுத்தது உக்ரைன். இந்நிலையில் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உதவும் என்று உக்ரைன் எதிர்பார்த்தது. ஆனால், எந்த நாடுகளும் உதவவில்லை என்றும், தாங்கள் தனித்து விடப்பட்டிருப்பதகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications